பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!
Aug 12, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதியில் திரும்ப பெறப்பட்ட வினாத்தாள்- குரூப் 2, 2a தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2026, 06:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சியில் குரூப் 2, 2a தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்களிடம் வினாத்தாள்கள் பாதியிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குரூப்-2 முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தேர்வர்கள் தீவிரமாக விடையளித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென அறைக்குள் நுழைந்த அதிகாரிகள், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தேர்வர்களிடமிருந்து வினாத்தாள்களைத் திரும்பப் பெற்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் மனவேதனையுடன் தேர்வு அறையில் இருந்து வெளியேறினர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் குரூப் 2, 2 ஏ தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் வேதனை அடைந்தனர்.

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதற்கான முறையான அறிவிப்பு சென்றடையாததால், சேலம் மையத்தில் 2 மணி நேரத்துக்குப்பின் தேர்வறையிலிருந்து தேர்வர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தேர்வுக்காக தாங்கள் பல ஆண்டுகள் தயாராகி வந்ததாகவும், தங்களின் காலத்தை அரசு வீணடித்து விட்டதாகவும் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு காலை தேர்வுகள் துவங்கின.சென்னையில் தேர்வு மையங்களில் குழப்பம் காரணமாக, தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கோவையில் தேர்வு மையத்தில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று, திருப்பூரிலும் நீண்ட நேரத்திற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி ரத்து தொடர்பான சுற்றறிக்கை கிடைத்ததால், 2 மணி நேரத்திற்கு மேலாக தேர்வெழுதிய தேர்வர்கள் வெளியேற்றப்பட்டதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags: Group 2 and 2A examinationsGroup 2 and 2A examinations cancelledGroup 2 and 2A examinations question papersGroup 2 and 2A examinations issue
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் துயர சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் தான் காரணம் – நயினார் நாகேந்திரன்

Next Post

தேனியில் நாதக தவெக மோதல் விவகாரம் – நாதக மாவட்ட செயலாளர் தலைமறைவு!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies