சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சி என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃவிண்வெளி நிகழ்வாகும். இது 2008இல் அறிமுகமானது. அதன்படி இந்த ஆண்டுக்கான விமானக் கண்காட்சி, சாங்கி மையத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெற்றது.
இதில், F-16C ரகப் போர் விமானம், AH-64D Apache ரக ஹெலிக்காப்டர், சீனா தயாரித்த வணிக விமானம் சி919 மற்றும் சி909 வணிக விமானம் போன்றவையும் வானில் பறந்து சாகம் நிகழ்த்தின.
இவ்வாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
















