திருப்பூர் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசி தாக்குதல் நடத்திய எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மேலும் 2 பேர், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.
ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
மேலும் இருவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மூன்று ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஜாபர் சாதிக், தாஜுதீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
















