கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி கிராமத்துக்குள் புற்றீசல் போல புகுந்த கம்பளிப்பூச்சிகள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒற்றாமரம் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மரங்கள், வீட்டின் சுற்றுசுவர், சமையல் அறை, குடிநீர் தொட்டிகள் என அனைத்து இடங்களிலும் கம்பளி பூச்சிகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் செய்வதறியாது தவித்து வரும் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலர், தீயணைப்புத்துறை, சுகாதார துறை, வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















