தென்காசியில் அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட விசிக துணைச் செயலாளராக ரீகன் குமார் என்பவர் உள்ளார்.
இவர், தென்காசி ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து, பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான ரீகன் குமாரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
















