தனது மகனின் திருமண விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்தார்.
அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியாவின் திருமணம் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. திருமணக் கொண்டாட்டங்கள் மார்ச் 3-ம் தேதியே தொடங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த சச்சின் டெண்டுல்கர், தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், பிரதமர் மோடி, இளம் ஜோடிக்கு வழங்கிய ஆசிகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் – சானியாவின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி ரகசியமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
















