பாகிஸ்தான் - மலேசியா உறவுக்கு வேட்டு - கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!
Feb 11, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நல்லுறுவை பேணி வந்த மலேசியா, தற்போது இந்தியாவை உற்ற நண்பனாக பார்க்க தொடங்கியிருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் பிரதமர் மோடியின் நேர்மையான மற்றும் உறுதியான முடிவுகள் பிடித்துப்போக, பாகிஸ்தானை விட்டு கொஞ்சம் கொஞ்சமான விலக தொடங்கியிருக்கிறது.

1957 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் – மலேசியா இடையேயான உறவுகள் இரட்டை குழல் துப்பாக்கி போலவே இருந்து வந்துள்ளது. ராணுவம், வர்த்தகம் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கே மலேசியா இணக்கம் காட்டியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் நின்ற குரல் கொடுத்த மலேசியா, ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியாவை எதிர்த்து கேள்வி எழுப்பிய வரலாறெல்லாம் உண்டு. ஐநா சபைக்கூட்டத்தில் உரையாற்றிய மலேசியா முன்னாள் பிரதமர் மகதீர் முகமது, பாகிஸ்தானுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்ததை உதாரணமாக கூறலாம்.

இந்தியாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் விவகாரம் பூதாகரமான போது, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த மலேசியா, இன்னும் பல காட்டமான விமர்சனங்களையும் பொதுவெளியில் அள்ளி வீசியது.

இப்படி நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வந்த மலேசியா, தற்போது பாகிஸ்தானின் கோரமுகத்தை புரிந்துகொண்டு இந்தியாவின் நட்பை நாட தொங்கியிருக்கிறது.

அதன் வெளிப்பாடகவே பிரதமர் மோடியின் மலேசிய சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமும் புன்முறுவலுடன் நடத்திய பேச்சுகள், அவர்களுக்குள் மலர்ந்த நட்புறவை மட்டுமல்ல, இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டிருப்பதையே காட்டியது.

அதுவும் பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா கொண்டிருக்கும் சமரசமற்ற கொள்கையை, மலேசியாவும் இந்த முறை ஓங்கி ஒலித்தது, பாகிஸ்தானுக்கு நிச்சயம் அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கும். பயங்கரவாதத்திற்கு நிதி பகிரப்படுவதை தடுக்கவும், தீவிரவாதிகளை வேரறுக்கவும் தலைவர்கள் இருவரும் சூளுரைத்தனர், இனி நம் பப்பு வேகாது என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியிருக்கும்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த இந்தியா எடுத்தும் வரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே, இந்தியா – மலேசியா இடையே மலர்ந்திருக்கும் புதிய உறவு என கூறப்படுகிறது

நீண்ட காலம் பாகிஸ்தான் புராணம் பாடிய மலேசியாவை, இந்தியா தனது நட்பு நாடாக மாற்றியிருக்கிறதென்றால், இங்கு தான் பிரதமர் மோடியின் ராஜதந்திர நகர்வு வெளிப்படுகிறது.

பாகிஸ்தான் உடனான உறவால், உலக அரங்கில் அவமானம் மட்டுமே கிடைக்கிறது என்ற நிலையில் இருந்த மலேசியாவின் மனநிலையை சரியாக கணித்து, பிரிக்ஸ கூட்டமைப்பில் இணைய மலேசியா கொண்டிருக்கும் ஆர்வத்தை புரிந்து, கச்சிதமாக காய் நகர்த்தியிருக்கிறார் சாணக்கியர் மோடி என புகழாரம் சூட்டுகின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

 

Tags: anwar ibrahimPAKISTAN ISSUEpm modi malaysia indiansmalaysia pm Anwar IbrahimMalaysia india friendshipPM ModiIndiapakistanmalaysia
ShareTweetSendShare
Previous Post

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

Next Post

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

Related News

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies