வெற்றிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!
Mar 31, 2026, 03:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 10:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்…

திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டாரங்களான காட்டுப்புத்தூர், சீனிவாசநல்லூர், உன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விளையும் ‘கற்பூர வெற்றிலை’ அதன் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

​தற்போது கற்பூர வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக வெற்றிலை விற்பனை சரிந்துள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

வெற்றிலை சாகுபடிக்கான இடுபொருட்கள், உரம், மற்றும் வேலையாட்கள் கூலி எனச் செலவுகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. அதிகாலை முதல் கடும் உழைப்பை கொட்டி விளைவித்த வெற்றிலையைச் சந்தைக்குக் கொண்டு சென்றால், கட்டுப்படியாகாத விலையே கிடைக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டு வெற்றிலைக்குக் கிடைக்கும் விலை, அதை பறிப்பதற்கான கூலிக்கும் கூடப் போதுமானதாக இல்லை என நிலவரத்தை அவர்கள் கூறுகின்றனர்.

வெற்றிலை விலை வீழ்ச்சியால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வெற்றிலைக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் வெற்றிலை பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Betel leafCamphor betelBetel nut prices fallTamilnadu farmerscauvery waterFARMERSTiruchy
ShareTweetSendShare
Previous Post

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

Next Post

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

Related News

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை – கிராம மக்கள் சாலை மறியல்!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies