வெற்றிலை விலை வீழ்ச்சி - கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!
Feb 11, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 10:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்…

திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டாரங்களான காட்டுப்புத்தூர், சீனிவாசநல்லூர், உன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விளையும் ‘கற்பூர வெற்றிலை’ அதன் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

​தற்போது கற்பூர வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக வெற்றிலை விற்பனை சரிந்துள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

வெற்றிலை சாகுபடிக்கான இடுபொருட்கள், உரம், மற்றும் வேலையாட்கள் கூலி எனச் செலவுகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. அதிகாலை முதல் கடும் உழைப்பை கொட்டி விளைவித்த வெற்றிலையைச் சந்தைக்குக் கொண்டு சென்றால், கட்டுப்படியாகாத விலையே கிடைக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டு வெற்றிலைக்குக் கிடைக்கும் விலை, அதை பறிப்பதற்கான கூலிக்கும் கூடப் போதுமானதாக இல்லை என நிலவரத்தை அவர்கள் கூறுகின்றனர்.

வெற்றிலை விலை வீழ்ச்சியால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வெற்றிலைக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் வெற்றிலை பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Betel leafCamphor betelBetel nut prices fallTamilnadu farmerscauvery waterFARMERSTiruchy
ShareTweetSendShare
Previous Post

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

Related News

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Load More

அண்மைச் செய்திகள்

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies