விருதுநகரில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விமர்சித்து பாஜகவினர் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
விருதுநகர் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு ஏற்படுவதால் அதனை தற்காலிகமாக மட்டுமே ஊழியர்கள் சரிசெய்கின்றனர்.
இந்த நிலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விமர்சித்து பாஜக சார்பில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது,
அதில் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? எனவும் விருதுநகரில் இருப்பது சாலைகளா அல்லது மரணக் குழிகளா? என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.
















