நேரு ஆட்சியில் வந்தே மாதரம் பாடலில் இருந்து கைவிடப்பட்ட சரணங்கள் உட்பட முழு பாடலையும் பாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில், தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளையும் கட்டாயம் பாட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகளாக இருக்க வேண்டுமென கூறியுள்ள மத்திய அரசு,
குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று ஜவஹர்லால் நேரு ஆட்சியில் நீக்கப்பட்ட 4 சரணங்கள் உட்பட வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் சேர்த்து பாடக வேண்டுமென உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















