தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக நிர்வாகி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகி சௌந்தர், சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 9 பஞ்சாயத்துகளில் எந்த நலத்திட்டங்களும் நடப்பதில்லை என குற்றம்சாட்டினார்.
















