அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பகுதியில் பாஜக சார்பில் ‘மோடி முகாம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன் ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுப்பதாகவும், ஆனால் அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், பாஜக அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோராது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுகவில் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
















