மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மகளிருக்கு திமுக அரசு தந்த உறுதிமொழிதான் உரிமை தொகை என்றும், யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கின்றனர் என்றும், முந்திக் கொண்டு திமுக அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், திராவிட மாடல் -2ல் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
















