அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படாவிட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படும் என நம்புவதாகவும் இல்லையெனில் அந்நாடு மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
















