ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் கையில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரியல் எஸ்டேஸ் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவு பகுதி கூர்மையான ஆயுதத்தால் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
















