மகளிர் உதவித் தொகை எனக்கூறி 5000 ரூபாய் வழங்கிய திமுக அரசு 2 ஆண்டுகளாக தாமதமாக திட்டத்தை தொடங்கியதால் அதற்கான தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மகளிருக்கு ரூ.5,000 என்பது தேர்தலுக்கான நிதி என்பது அப்பட்டமாக தெரிவதாக கூறினார்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? என்றும், திமுக அரசு எதை அறிவித்தாலும் மக்கள் ஏமாறபோவதில்லை என்றும் அவர் கூறினார்.
மக்கள் மீது அக்கறை எனக்கூறும் திமுக அரசு டாஸ்மாக்கை ஒழிக்காதது ஏன்? எனறும், மக்களை ஏமாற்றுவதே திமுக அரசின் குறிக்கோள் என்றும் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
















