திமுக கூட்டணியில் நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார்.
திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கிவரும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராத ஒன்று என தெரிவித்தார்.
இவரது இந்த பதில் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில் ஆட்சியில் பங்கு என்பது தேவையற்றது எனவும் திமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளும் தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் வரும் 18ம் தேதி சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திமுக கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா? என முடிவெடுக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
















