வளர்ந்த பாரதம் என்ற இந்தியாவின் பயணத்தில், சேவா தீர்த்தம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்கள் முக்கிய மைல்கல்லை குறிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் கர்தவ்ய பவன் கட்டடங்களை திறந்து வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தப் புதிய கட்டடங்கள் வெறும் கற்களாலும் சிமெண்ட்டாலும் ஆனவை அல்ல, மாறாக 140 கோடி இந்தியர்களின் கனவு சின்னம் என்று குறிப்பிட்டார்.
மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட சவுத் பிளாக் மற்றும் நார்த் பிளாக் கட்டடங்கள், இந்தியாவை காலனித்துவ மனநிலையில் வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை என்று கூறிய அவர், அந்த அடிமைத்தனத்தின் அடையாளத்தை விடுத்து நாம் புதிய வரலாற்றை தொடங்குவதாகவும் தெரிவித்தார். இந்த பெயர் வைத்ததன் மூலம், அதிகாரம் என்பது சேவை செய்வதற்கானதென மாறியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
















