இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதான சந்தை மற்றும் பொது விளையாட்டு மைதானப் பகுதிகளுக்குள் ஒற்றை யானை ஒன்று திடீரென புகுந்தது. அப்போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது அந்த யானை ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தியது.
இதில் சிக்கி நால்வர் பலத்த காயமடைந்தனர். அவர்களில், கொழும்புவை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















