முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை என பாகம தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சோழிங்கநல்லூரில் பாமக சமூக ஊடக பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக ஊடகங்களில் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்சியை வளர்ப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பொய்வாக்குறுதிகள் மற்றும் அவரது ஊழல் என்பதை மையப்படுத்தி பாமக சார்பில் பாடல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிகாரம் மட்டுமே இருப்பதாகவும் அவருக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுகவை வீழ்த்துவதே நமது ஒரே நோக்கம் எனவும் அவர்களின் ஊழலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
















