தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக சீட்டுகளை பெற வேண்டும் என, மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நிர்வாகிகளுடனான செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் எனவும், அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், உள்ளாட்சியில் 30 விழுக்காடு பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் முன்வைக்கும் தீர்மானத்தையும் காங்கிரஸ் நிர்வாகிகள் நிறைவேற்றினர்.
கூட்டணியில், கூட்டணி கட்சிக்கான இடங்கள் குறைந்து கொண்டே வருவதாகவும், இதனை தவிர்த்து காங்கிரஸுக்கு அதிக சீட்டுகளை வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
















