சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 காளைகளும், காளைகளை அடக்க அணிக்கு 9 பேர் வீதம் 162 காளையர்களும் பங்கேற்றனர்.
தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ரொக்கப் பரிசு, ஆட்டுக்குட்டி, தென்னங்கன்று, கட்டில், சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
















