அவதூறு வழக்கு - டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!
Feb 16, 2026, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

Manikandan by Manikandan
Feb 16, 2026, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவதூறு வழக்கில் டி.ஆர்.பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை நடத்திய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, கப்பல் வாங்கியது தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினார்.

கடந்த 2023 ஏப்ரல் 14ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, DMK FILES என்ற பெயரில் பலரின் சொத்து விவரங்களை வெளியிட்டார்.

அதில், திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலுவுக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தின் அனுமதியுடன் டி.ஆர்.பாலுவை அண்ணாமலை நேரடியாக குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது டி.ஆர்.பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறியது குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பிய நிலையில்,

பத்து கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறியது தவறான தகவல் என்றும், தான் இரண்டு கப்பல்கள் மட்டுமே வாங்கியதாகவும் டி.ஆர்.பாலு பதிலளித்தார்.

தொடர்ந்து, டி.ஆர்.பாலு வைத்திருக்கும் 18 கார்கள், அவரது மகன் ராஜ்குமார் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுபான ஆலை உள்ளிட்டவை தொடர்பாக அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஆனால், அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய டி.ஆர்.பாலு, தெரியாது, சரியல்ல என்று தனது பதில்களை சுருக்கமாக முடித்தார்.

தொடர்ந்து, டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினர் நடத்தும் சாராய ஆலை குறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு, அது சாராய ஆலை அல்ல; ரசாயன ஆலை என்று பதிலளித்த டி.ஆர்.பாலு,

அந்த ஆலையில் தான் சிறிய பங்குதாரர் மட்டுமே; அந்த நிறுவனம் தனக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்றும் கூறினார்.

பதிலுக்கு, அண்ணாமலை அவரது மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு,

ஊழல் முறைகேடு குற்றச்சாட்டால் தான் அண்ணாமலையின் மாநில தலைவர் பறிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட அண்ணாமலை, தவறான தகவல்களை வைத்து உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து குறுக்கு விசாரணை நிறைவடையாததால், வழக்கு விசாரணை ஏப்ரல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

Tags: annamalai bjpbjp indiatn bjptr baludmk newssaidapettai courtcourtbjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!

Next Post

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

Related News

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் பரபரப்பு – ஜெர்மனியில் அவமானப்பட்ட பாக்., ராணுவ தளபதி-சிறப்பு தொகுப்பு

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் – ஒபாமா

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில் பிளக்ஸ் பேனரால் சர்ச்சை – திமுகவினர் அதிருப்தி!

நான் காந்தியவாதி; ராகுல்வாதி அல்ல – மணிசங்கர் அய்யர் அதிரடி பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

அவதூறு வழக்கு – டி.ஆர்.பாலுவிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை!

முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசர கதியில் நடைபெறும் மின் இணைக்கும் பணிகள்!

திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த மை லார்ட் படக்குழுவினர்!

தீர்ப்பு அளித்ததாக நீதிபதி மீது அரிவாள் வீச்சு – போலீசார் விசாரணை!

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் -நயினார் நாகேந்திரன்

பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றதால் சர்ச்சை

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணை சந்தித்து பேசிய பில் கேட்ஸ்!

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை திருப்பி கொடுக்க வெளிநாடுகள் சம்மதம்!

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies