பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், மதுரையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி NDA கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சென்னை பசுமைவழிச் சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில், பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பிறகு நடைபெறும் இந்த சந்திப்பு, இரு கட்சிகளிடையே நிலவும் இணக்கமான உறவை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















