ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், இதில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று, மாநாட்டில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இது உலகத்தின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு என்று தெரிவித்தார். இந்தியாவைப் பொறுத்த வரை உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வைத்துள்ளதாகவும், தொழில்நுட்பத்தை இந்தியா மிக விரைவாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப மாறி வருவதாகவும் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஏஐ தொழில்நுட்பத்தை மனித மையமாக மாற்ற வேண்டும் என்றும், ஏஐ தொழில்நுட்பம் நமது உழைப்பை மேலும் கூர்மையாக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமரின் உரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிராந்திய மொழிகளிலும் நேரடியாக மொழி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















