டாஸ்மாக் கடை மூலம் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குவதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் சிங்கப் பெண்ணே எழுந்து வா என்ற தலைப்பில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் நடைபெற்றது. இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், விவசாயத்தைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார். பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வேளாண் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், கட்சி கொடி கட்டிய வாகனங்கள் இலவசமாக பயணிப்பதாகவும் விமர்சித்தார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து டாஸ்மாக் கடைக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 350 கோடி ரூபாய் செல்வதாகவும் யாரோ ஒருவர் பிழைக்க மக்களை பலி ஆக்குகிறார்கள் எனவும் செளமியா அன்புமணி தெரிவித்தார்.
















