சென்னை ஆவடியில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
சென்னை ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிறந்தநாளை ஒட்டி அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். BRS கட்சி கொடியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஆபத்தான முறையில் இயக்கினர்.
அத்துடன் இது தெலங்கானா இல்லை தமிழ்நாடு என்ற வாசகத்தை குறிப்பிட்டு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். சாலை நடுவே கேக் வெட்டி சந்திரசேகர ராவின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















