புதுச்சேரியில் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
பெங்களூருவை சேர்ந்த விஜய், அவரது மனைவி சோனியா மற்றும் உறவினர்கள் என மொத்தம் 8 பேர் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.
அப்போது, வீராம்பட்டினம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது படகில் சவாரி சென்றுள்ளனர்.
சின்ன வீராம்பட்டினம் அருகே படகு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலை காரணமாக படகு தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதனைக் கண்ட மீனவர்கள் விரைந்து சென்று தங்கள் மீன்பிடி படகுகள் மூலம் கடலில் விழுந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலில் மூழ்கியதில் சோனியா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார், சோனியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த சோனியாவின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















