லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு, பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றதாகவும், டெண்டர் ஒதுக்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர்
பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு, கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்ததையும் உறுதி செய்தனர்.
மேலும் இது தொடர்பான ஆவணங்களையும், அமைச்சர் நேருவின் மீதான புகார்களையும் கடிதமாக தயார் செய்த அமலாக்கத்துறை, அதனை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அனுப்பியது.
ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் அமைச்சர் நேரு மீதான புகார்களை ஆதாரத்துடன் சமர்ப்பித்தும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக அதிமுக எம்பியும், வழக்கறிஞருமான இன்பதுரை வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் கே.என்.நேரு மீதான புகார்கள் குறித்து அமலாக்கத்துறை போதுமான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தெரிவித்தனர்
மேலும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆணையிட்ட நீதிமன்றம்
அவர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
















