கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் காரணமாக திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்புள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிறப்பான ஆட்சி கொடுத்த முதல்வரை சந்தித்து வாழ்த்தியதாக தெரிவித்தார்.
தமிழக மக்களின் எண்ணத்தைதான் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார். திமுகவின் ஆட்சியே தொடர வாய்ப்புள்ளதகாவும் ஓபிஎஸ் கூறினார்.
















