புதுச்சேரியில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ள நிலையில் இது தொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் தலைமையில், மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ராஜசேகர் ஆகியோர் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, என்.ஆர்.காங்கிரஸ் , பாஜக கூட்டணி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது எனவும் அதிமுக, பாமக, லஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தவெகவுடன் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி என்ற தகவல் வெறும் வதந்தி எனவும் கூறினார்.
















