அமெரிக்க நீதிமன்றம வர்த்தக வரி விதிப்பை நிராகரித்த நிலையில், உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி விதித்து அதிபர் ட்ரம்ப் உத்ததரவிட்டுள்ளார்.
உலக நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கு புதிதாக 10 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு உடடினயாக அமலுக்கு வருவதாகவும் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நினைத்து வெட்கப்படுவதாகவும், இந்த தீர்ப்பு முட்டாள்தனமானது எனவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்குவதற்காகவே உலக நாடுகளுக்கு வரி விதித்தாகவும், இந்த வரி விதிப்பை பயன்படுத்தி 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவசர அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் வரி விதிக்க முடியாவிட்டாலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின்கீழ் மீண்டும் வரி விதிக்கப் போவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
















