அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வர ஆர்வமாக இருப்பதாக, அந்நாட்டின் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இந்தியா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெற்றது.
இதுதொடர்பாக பேசிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் , அதிபர் டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாகவும், அதிபர் டிரம்ப் இந்தியா வர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உரிய நேரத்தில் அதிபர் டிரம்பும், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ரூபியோவும் இந்தியாவுக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார்.
















