பத்து லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார்.
ஒரு லட்சம் கோடி போக்குவரத்துத்துறையில் கடனை வைத்துக்கொண்டு இலவச பயணம் தேவையா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இலவச பயணங்களை கொடுத்துவிட்டு, ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சம்பளம் எப்படி கொடுப்பீர்கள்? என்றும் அவர் வினவினார்.
ஒவ்வொரு குடும்ப அட்டையிலும் ரூ.2 லட்சம் கடன் உள்ளது என்றும், “ரூ10 லட்சம் கோடி கடனை வைத்துக் கொண்டு பெண்களுக்கு ரூ.5,000 வழங்கும் அரசு, அரசா? தரிசா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
















