பள்ளி சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்து விட்டதாகவும், போதைப்பொருட்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு எளிதல் கிடைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
















