தங்கம் விலை உயர்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என திமுக எம்பி தரணி வேந்தன் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக எம்பி தரணி வேந்தன், தங்கம் விலை பற்றிய தவறான தகவலை மக்களிடம் தெரிவித்தார்.
நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்வதற்கு பாஜகவும், பிரதமர் மோடியும்தான் காரணம் என அவர் கூறினார்.
திமுக எம்பியின் இந்த பேச்சு, பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
















