பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகவும், எதையும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராகவும் ஜெயலலிதா இருந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது நாட்டில் மக்களுக்காக உழைப்பவர்கள் எப்போதும் மக்கள் மனதிலேயே வாழ்வார்கள் என்றும், அப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவர்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.
அவரது பெயரைச் சொன்னாலே தமிழக மக்களின் முகம் மலர்வதாக கூறிய பிரதமர் மோடி, பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகவும், எதையும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராகவும் ஜெயலலிதா திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஜெயலலிதா உறுதியான நடவடிக்கைகளை எடுத்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசபக்தி உணர்வு அவருக்குள் ஆழமாகப் பதிந்திருந்ததாக கூறினார்.
ஜெயலலிதாவுடனான ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு உரையாடலும் இன்னும் தனது மனதில் பசுமையாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
















