தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன், காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தினார்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் முன்னெடுத்ததால், திமுக – காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்பூட்டு போடுவதுடன், நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதால் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்தது.
இந்த சூழலில், காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின்பேரில் சென்னை வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார்.
45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தோ்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியையும் அக் கட்சி கோரி வருவது குறிப்பிடத் தக்கது.
















