கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருகை புரிந்த தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய காட்சி வெளியாகியுள்ளது.
கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில், தொண்டர்களுக்காக திமுக சார்பில் பிரத்யேக தின்பண்ட பைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, மாநாட்டில் கொள்கை உரைகளைக் கேட்க வேண்டிய தொண்டர்களில் ஒரு சிலர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கிப் படையெடுத்தனர்.
பின்னர், வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கியது மட்டுமின்றி, மாநாட்டில் வழங்கப்பட்ட காரம் மற்றும் பிஸ்கட்களை டாஸ்மாக் வாசலிலேயே வைத்து ‘சைட் டிஷ்’ ஆக பயன்படுத்தினர்.
ஒருபுறம் மேடையில் கொள்கை முழக்கங்கள் ஒலிக்க, மறுபுறம் மது போதையில் தொண்டர்கள் இருக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
















