திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 2-ம் நாள் உற்சவத்தில் சுவாமிகள் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாசித் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
2ஆம் நாள் உற்சவத்தையொட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















