தமிழகம் - மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு அமைப்புகள் அதிரடி - கூட்டு நடவடிக்கையால் பயங்கரவாத சதி முறியடிப்பு
Mar 15, 2026, 12:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் – மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு அமைப்புகள் அதிரடி – கூட்டு நடவடிக்கையால் பயங்கரவாத சதி முறியடிப்பு

Manikandan by Manikandan
Feb 23, 2026, 08:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத சதியை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எல்லைத் தாண்டிய சதித் திட்டங்கள் குறித்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைப்புகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. தீவிரவாத வலையமைப்புகள் மறைமுகமாக செயல்பட்டு சமூக அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் நிலையில், அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பது பாதுகாப்பு அமைப்புகளுக்கு முக்கிய சவாலாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், நம் நாட்டில் நடக்கவிருந்த ஒரு பேராபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு மாநிலங்களில் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 6 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த இருவர் என மொத்தம் 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை அமைப்புகள் வழங்கியுள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைத் தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச தீவிரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்தியாவில் தாக்குதல்களை திட்டமிடும் பணியில் இக்குழு ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி, பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி பகுதிகளில் ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி அவர்கள் நீண்ட காலமாக அப்பகுதிகளில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதே வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் மேற்கு வங்கத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது, சந்தேக நபர்களிடம் இருந்து எட்டு கைப்பேசிகள் மற்றும் பதினாறு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை மூலம் வெளிநாட்டு தொடர்புகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் கூடுதல் உடந்தைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் “FREE KASHMIR” என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களே, இந்த குழுவை பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் புலனாய்வு விசாரணையில், சமூக வலைதளங்கள் வழியாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத கருத்துகளைப் பகிர்ந்ததும், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் ரயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து, இந்த வலையமைப்பின் முழு பின்னணியை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையால் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Tags: terrorist organizationsIndian statestamilnadupakistanindian armySecurity ForcesBangladesh
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி – கையெழுத்தாகும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள்…சிறப்பு தொகுப்பு

Next Post

மனைவியை அடிக்க அனுமதி : தாலிபானின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies