சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் அவரது உறவினர் அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டதாக கூறிய அவரது உறவினர் தேவி என்பவர், அன்மையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இவருக்கு சட்ட உதவிகள் கிடைக்காத நிலையில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அண்ணாதுரையிடம் உதவியை நாடினார். பின்னர் இருவரும் சேர்ந்து அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளையும் , அவரது தரப்பில் இருந்து பெறப்படும் மிரட்டல்கள் குறித்தும் வெளியிட்டனர்.
அப்போது தங்களின் நிலை குறித்து தமிழ்ஜனம் தொலைக்காட்சி முதலில் செய்திகள் வெளியிட்டதாக அண்ணாதுரை தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காவிட்டால் சேலத்திலும், சென்னையிலும் அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
















