கொலைகாரர்களின் கூடாரமான அறிவாலயம் மாறிவிட்டதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட
சிறு சச்சரவில், உதவித் தொழிலாளர் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திரு. சிவமூர்த்தி என்பவரை, அப்பகுதி திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளரின் மகன் ஆதித்யா காரை ஏற்றி படுகொலை செய்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்
மேலும் கடந்த ஐந்தாண்டுகால திமுக அவல ஆட்சியில், “திமுககாரன்” என்ற அடைமொழி குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனாலும் அதைக் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களை அடிமைகள் போலவும், பொம்மைகள் போலவும் நடத்தும் திமுகவினரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்
“குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்று மேடைகளில் வீர வசனம் பேசினால் மட்டும் போதாது, அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில், தறிகெட்டுத் திரியும் கட்சிக் காரர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் கட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும்.
கடைந்தெடுத்த ரவுடிகளை மட்டுமே கொண்டு கட்சி நடத்தும் திமுகவை, அரியணையில் இருந்து மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்
















