திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் அங்கிருந்து பாதியிலேயே வெளியே சென்றதால், காலி இருக்கைகளுக்கு மத்தியில் தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
நாகல்நகரில் பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக்கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. செந்தில் குமார் பேசிக்கொண்டிருந்தபோதே அங்கிருந்த பெண்கள் எழுந்து சென்றனர். எனினும், தனது பேச்சை உடனடியாக முடிக்க முடியாமல், செந்தில்குமார் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இச்செயல் அமைந்தது அப்பகுதி தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
















