பட்டியலின மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி, சென்னையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திமுக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி. துரைசாமி மற்றும் மா.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே? என்றும், திமுக அரசு பட்டியலின மக்களை வஞ்சிப்பது நீதியா? என்றும் கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர்.
மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நிதியை, திமுக அரசு வாக்குக்காக செலவு செய்துவிட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் நிதித்துறை செயலர் மீது வழக்கு தொடர வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
















