கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த தமிழக, ஆந்திர சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து சென்ற சுமார் 15 சுற்றுலாப் பயணிகள் அதிரப்பள்ளி ஆற்றில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் குளிப்பதற்காக நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது திடீரென ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது பரிதவித்தனர். இதனை கண்ட ரிசார்ட் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வனப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















