திமுகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்து வந்ததை, அக்கட்சியில் இணைந்து ஓபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த யாரும் ஓபிஎஸ்ஸை பார்க்கவில்லை என தெரிவித்தார்.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் தென் மாவட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், திமுகவில் சேர்ந்த ஓபிஎஸ், அவரது மகனால் இழப்பு என கூறுவது தவறு என்றும் கூறினார்.
திமுகவுடன் ஓபிஎஸ் மறைமுக கூட்டணியில் இருப்பதாக இபிஎஸ் கூறியது உறுதியாகியுள்ளதாகவும் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
















