தருமபுரி அருகே, மயானத்திற்கு சாலை வசதி கேட்டு, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஓமநத்தம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு மயானத்திற்கென பொது வழிப்பாதை இன்றி இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் திண்டாடி வருகின்றனர்.
ஓமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் உயிரிழந்த நிலையில், மயானத்திற்கு சாலை வசதி கேட்டு, ஈச்சம்பட்டி-ஓமநத்தம் சாலையில், இறந்தவரின் சடலத்தை வைத்து மறியல் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டத்தை கைவிட்டனர்.
















