காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!
Jul 28, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் காவலருக்கும் திமுக மாவட்ட துணைச் செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண் சிங் என்பவர், அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, திருட்டு வழக்கில் தொடர்புடைய ‘அப்பு’ என்ற நபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்புவை காவலர்கள் அருகிலுள்ள புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ந. துரை, திருட்டு வழக்கில் தொடர்புடைய அப்புவை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியே இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தடுக்க முயன்ற காவலர் அருண் சிங், மாவட்ட துணைச் செயலாளர் தள்ளிவிட்டதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்ட 40-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அப்புவை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த காவலர்களை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படும் இந்த சம்பவம், ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ChennaipoliceDMKRayapettatn policefightdmk supporters fightராயப்பேட்டை
ShareTweetSendShare
Previous Post

மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி – நிர்வாக கோளாறால் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்ற தேனி வீரர்கள்!

Next Post

மயானத்திற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies