இஸ்ரேல் – அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஒரே நேரத்தில் 7 நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் – அமெரிக்க படைகள் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக “ஆப்ரேஷன் ஃபதே-இ-ஜாங்” என்ற பெயரில் மத்திய கிழக்கில் உள்ள 7 நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
முதலில் இஸ்ரேலை குறிவைத்த ஈரான், அடுத்தபடியாக சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
















